மேட்டுப்பாளையம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம்: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்காததை எதிர்த்து பணி புறக்கணிப்பு மற்றும் கருப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர்.



Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி ஒப்பந்ததாரரை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் பணிகளைப் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காததோடு, பிஎஃப், இஎஸ்ஐ போன்ற சலுகைகளுக்கான பிடித்தங்களை முறையாக செலுத்தாமல் ஒப்பந்ததாரர் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவு பணிகளை புறக்கணித்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வி.சி.க மாவட்ட செயலாளர் தொல்குடி மைந்தன் தலைமையில், சங்கர் நகர் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் ஊர்வலம் நடத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். முறையாக ஊதியம் வழங்குவதோடு, பிடித்தம் செய்யப்பட்ட பி.எப், இ.எஸ்.ஐ தொகைகளை உரிய முறையில் செலுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...