திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 52 பயணிகள் உயிர் தப்பினர்

தாராபுரம் அருகே திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் 52 பயணிகள் உயிர் தப்பினர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நள்ளிரவு ஒரு அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, தாராபுரம் பேருந்து நிலையம் அருகே அலங்கியம் பைபாஸ் சாலையில் வந்தபோது திடீரென முன்பக்க ஸ்டேரிங் அருகே தீப்பிடித்தது.

பேருந்தின் ஓட்டுனர் கணேசமூர்த்தி (வயது 55) சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை பைபாஸ் சாலையில் ஓரமாக நிறுத்தினார். அவர் உடனடியாக அனைத்து பயணிகளிடமும் தீப்பிடித்த விவரத்தைத் தெரிவித்தார். இதனால் பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



பயணிகள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீ வேகமாகப் பரவி, பேருந்து முழுவதும் எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

பயணிகள் திருச்செந்தூர் செல்வதற்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டபோது, இடப்பற்றாக்குறை காரணமாக பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் மாயவன், மூலனூர் காவல் ஆய்வாளர் விஜயா மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த பேருந்து தீ விபத்து சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...