கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் தூய்மைப் பணி மற்றும் சாலை சீரமைப்பு

கோவை மாநகராட்சியின் 1-வது வார்டில் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் புதிய கழிப்பிடம் கட்டுவதற்கான தூய்மைப் பணி மற்றும் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி செப்டம்பர் 26 அன்று மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியின் 1-வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று (செப்டம்பர் 26) முக்கிய தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய கழிப்பிடம் கட்டுவதற்காக அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்த முயற்சி பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்.



மேலும், அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் முதல் ஜல்லிக்காடு முகப்பு வரையிலான பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.



3-வது அத்திக்கடவு திட்டத்தின் குழாய் பதிப்பு பணிகளால் சேதமடைந்த சாலையை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றினர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...