கோவை கவுண்டம்பாளையத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை கொண்டாடிய திமுகவினர்

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சட்ட விரோத பண பரிமாற்ற புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக-வினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத்விக்னேஷ் தலைமையில் பாட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிக்கொண்டாடினர்.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜவஹர், சுந்தரம், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பகுதி துணைச்செயலாளர்கள் சங்கர், கண்ணகி, ஈஸ்வரன் பொருளாளர் வசந்த்குமார், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், சனில்குமார், மாமன்ற கவுன்சிலர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், வட்டசெயலாளர்கள் குட்டி என்கிற வேலுச்சாமி, ரமணன், குமரேசன், காளிதாஸ், தன்ராஜ், நிர்வாகிகள் எம்.கே.தாஸ், மின்னல் சுரேஷ், ராசு, சேகர், ரவி, ஜனா, மணி, ஆறுமுகம். ஈஸ்வரன், சங்கர், செந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...