கோவை கவுண்டம்பாளையத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை கொண்டாடிய திமுகவினர்

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சட்ட விரோத பண பரிமாற்ற புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக-வினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத்விக்னேஷ் தலைமையில் பாட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிக்கொண்டாடினர்.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜவஹர், சுந்தரம், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பகுதி துணைச்செயலாளர்கள் சங்கர், கண்ணகி, ஈஸ்வரன் பொருளாளர் வசந்த்குமார், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், சனில்குமார், மாமன்ற கவுன்சிலர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், வட்டசெயலாளர்கள் குட்டி என்கிற வேலுச்சாமி, ரமணன், குமரேசன், காளிதாஸ், தன்ராஜ், நிர்வாகிகள் எம்.கே.தாஸ், மின்னல் சுரேஷ், ராசு, சேகர், ரவி, ஜனா, மணி, ஆறுமுகம். ஈஸ்வரன், சங்கர், செந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...