மயிலாடுதுறை-கோவை முன்பதிவு இல்லா ரயில் சேவை கோரிக்கை: தெற்கு ரயில்வேயின் முடிவால் ஏமாற்றம்

கோவை-மயிலாடுதுறை முன்பதிவு இல்லா ரயில் சேவைக்கு பதிலாக, மயிலாடுதுறை-பாலக்காடு வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் முன்பதிவு இல்லாத ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தெற்கு ரயில்வே தலைமையகம் மயிலாடுதுறை-பாலக்காடு வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவு ரயில் பயணிகள் நலச்சங்கம் (WARP-CPPD) உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோரிக்கை வைக்காத பாலக்காடுக்கு ரயில் சேவையை நீட்டித்திருப்பது பெரும் முரணாக இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

டெல்டா பகுதியில் இருந்து கோவைக்கு வந்து படிக்கும் மாணவர்கள், வழிபாட்டிற்காக கோவையிலிருந்து கும்பகோணம் செல்லும் மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து பயனடையும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட வேண்டும் என்று கோரி வந்தனர்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

RAAC இணைச் செயலாளர் சதீஷ் கூறுகையில், "குறைந்த கட்டணத்தில் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய வகையில், மயிலாடுதுறை-கோவை முன்பதிவு இல்லாத ரயில் சேவை தொடங்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதை ஆதரித்து வருகின்றனர். ஆனால் தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவு மிகவும் கண்டிக்கத்தக்கது," என்றார்.

ரயில் பயணிகள் நலச்சங்க (WARP-CPPD) செயலாளர் மோகன் குமார், "கோவையில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் பாலக்காடுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டிருப்பது மக்களை பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த உத்தரவை ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்து ரயில் சேவையை கோவைக்கு கொண்டு வர வேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...