மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் விடுதலையை கொண்டாடிய திமுகவினர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



காரமடை கிழக்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காரமடை அருகே தென் திருப்பதி நால்ரோடு பகுதியில், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். எம். டி. கல்யாணசுந்தரம் தலைமையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளேபாளையம் ஊராட்சி நால்ரோடு பகுதியில், ஊராட்சி தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமையிலும், துணைத் தலைவர் சுரேந்திரன் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



மேட்டுப்பாளையம் நகரில், நகர திமுக சார்பில் நகர செயலாளர்கள் முனுசாமி, முகமது யூனூஸ் ஆகியோர் தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது.



அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...