எஸ்.எஸ்.குளம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - நூற்றுக்கணக்கான மக்களுடன் வந்த அதிமுக எம்எல்ஏ

கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா மீது முறைகேடு புகார். அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கவிதா, சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டபோது, கவிதா மீண்டும் தனக்கு சாதகமானவர்களைக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டபோது, கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறி, அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான சுமதி வடிவேலு, சகுந்தலா தேவி, ராஜேஸ்வரி, செல்வி ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமாரை அணுகினர். அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும், கவிதா தங்களை ஜாதி பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்துவதாகவும், தங்கள் மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும் கூறிய வார்டு உறுப்பினர்கள், அவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், "நடந்த விஷயம் குறித்து விளக்கமளிக்க வந்தோம். மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்," என்று தெரிவித்தார்.



மனு அளிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வந்ததால், சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...