எஸ்.எஸ்.குளம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - நூற்றுக்கணக்கான மக்களுடன் வந்த அதிமுக எம்எல்ஏ

கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா மீது முறைகேடு புகார். அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கவிதா, சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டபோது, கவிதா மீண்டும் தனக்கு சாதகமானவர்களைக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டபோது, கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறி, அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான சுமதி வடிவேலு, சகுந்தலா தேவி, ராஜேஸ்வரி, செல்வி ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமாரை அணுகினர். அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும், கவிதா தங்களை ஜாதி பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்துவதாகவும், தங்கள் மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும் கூறிய வார்டு உறுப்பினர்கள், அவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், "நடந்த விஷயம் குறித்து விளக்கமளிக்க வந்தோம். மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்," என்று தெரிவித்தார்.



மனு அளிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வந்ததால், சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...