கோவையில் 50 ஆண்டுகால சாரமேடு ஆக்கிரமிப்பு அகற்றம்: மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், சாரமேடு சாலையில் 50 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முதற்கட்டமாக 27 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை அகலம் 45 அடியிலிருந்து 50 அடியாக விரிவடைந்தது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சாரமேடு சாலையில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாரமேடு சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் காரணமாக சாலையின் அகலம் 15 அடியாக குறுகியிருந்தது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்த பின்னர், ஆக்கிரமிப்புகளை மூன்று கட்டங்களாக அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, செப்டம்பர் 25, 2023 அன்று முதற்கட்ட நடவடிக்கையாக நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சாலையின் இருபுறமும் 660 அடி நீளத்தில் இருந்த 27 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



இந்த நடவடிக்கையால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் சாலையின் அகலம் 45 அடியிலிருந்து 50 அடியாக விரிவடைந்துள்ளது.



இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இச்சாலை பொள்ளாச்சி சாலையையும் நஞ்சுண்டாபுரம் சாலையையும் இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி ஆணையர், இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...