வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி அதிமுக எம்எல்ஏ மனு

கோவை மாவட்டத்தில், வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் குறித்து, கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ அருண் குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பதவி ஏற்ற நாள் முதல் முறைகேட்டில் ஈடுப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வழக்கை திசை திருப்பும் வகையில் பொய் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று வலியுறுத்தி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இன்று (செப்டம்பர் 25) மனு அளித்தார்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சுகுமார், சேர்மன் கவிதா சண்முகம், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...