வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி அதிமுக எம்எல்ஏ மனு

கோவை மாவட்டத்தில், வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் குறித்து, கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ அருண் குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பதவி ஏற்ற நாள் முதல் முறைகேட்டில் ஈடுப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வழக்கை திசை திருப்பும் வகையில் பொய் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று வலியுறுத்தி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இன்று (செப்டம்பர் 25) மனு அளித்தார்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சுகுமார், சேர்மன் கவிதா சண்முகம், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...