கோவையில் பகலில் பிச்சைக்காரராக நடித்து, இரவில் திருடிய நபர் கைது

கோவை சூலூரில் பகலில் பிச்சைக்காரராக நடித்து, இரவில் ஹெல்மெட் அணிந்து கடைகளில் திருட முயன்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் கலங்கள் சாலையில் உள்ள ஒரு பிரபல பழமுதிர் நிலையத்தில் நடந்த திருட்டு முயற்சி சம்பவம் குறித்த விசாரணையில், பகலில் பிச்சைக்காரராக நடித்து இரவில் திருடும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடையை அப்பாஸ் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்ற அப்பாஸ், மறுநாள் காலை கடைக்கு வந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். ஆனால், கடையில் எதுவும் திருடப்படவில்லை.



இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் கடையை உடைத்து உள்ளே நுழைந்து சென்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், இந்த நபர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் என்றும், அவர் பகல் நேரங்களில் பிச்சைக்காரராக நடித்து கடை முன்பு படுத்துக்கொண்டு கடையை கவனித்து, இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கடைகளுக்குள் புகுந்து திருட முயற்சிப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ராமசாமியை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று (செப்டம்பர் 24) சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...