கோவையில் பகலில் பிச்சைக்காரராக நடித்து, இரவில் திருடிய நபர் கைது

கோவை சூலூரில் பகலில் பிச்சைக்காரராக நடித்து, இரவில் ஹெல்மெட் அணிந்து கடைகளில் திருட முயன்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் கலங்கள் சாலையில் உள்ள ஒரு பிரபல பழமுதிர் நிலையத்தில் நடந்த திருட்டு முயற்சி சம்பவம் குறித்த விசாரணையில், பகலில் பிச்சைக்காரராக நடித்து இரவில் திருடும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடையை அப்பாஸ் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்ற அப்பாஸ், மறுநாள் காலை கடைக்கு வந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். ஆனால், கடையில் எதுவும் திருடப்படவில்லை.



இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் கடையை உடைத்து உள்ளே நுழைந்து சென்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், இந்த நபர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் என்றும், அவர் பகல் நேரங்களில் பிச்சைக்காரராக நடித்து கடை முன்பு படுத்துக்கொண்டு கடையை கவனித்து, இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கடைகளுக்குள் புகுந்து திருட முயற்சிப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ராமசாமியை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று (செப்டம்பர் 24) சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...