கோவை எக்கோ காலனியில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் நல மையம் திறப்பு

கோவை எக்கோ காலனியில் தனியார் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டு குழந்தைகள் நல மையத்தை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.52-க்குட்பட்ட பீளமேடு, ஹட்கோ காலனி பகுதியில், தனியார் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கற்றுக்கொள்ளுதல் வசதியுடன் கூடிய நவீன குழந்தைகள் நல மையத்தினை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்த குழந்தைகள் நல மையம் கோயம்புத்தூர் வேல்முருகன் எண்டர்பிரைசஸ் பி.லிமிடெட் நிறுவனத்தின் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ளது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி, மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.



விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வேல்முருகன் எண்டர்பிரைசஸ் பொது மேலாளர் வேலுமணி, WOW EDUCARE நிறுவனர் ரூபன், இயக்குநர்கள் சந்திரசேகர், காமாட்சி ஜெயராம், நிர்வாக இயக்குநர் சாம் நிக்கோலஸ், உதவி பொறியாளர்கள் ஜெகதீஸ்வரி, கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த குழந்தைகள் நல மையம் பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...