மேட்டுப்பாளையம் நகராட்சியின் புதுமையான குப்பை தடுப்பு முயற்சி: வடிவேலு பாணியில் விழிப்புணர்வு பேனர்

மேட்டுப்பாளையம் நகராட்சி, பொதுக்கழிப்பிடம் அருகே குப்பை கொட்டுவதைத் தடுக்க, நடிகர் வடிவேலு பாணியில் விநோதமான பேனர் வைத்துள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி, பொதுக்கழிப்பிடம் அருகே குப்பை கொட்டுவதைத் தடுக்க புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. காட்டூர் ரயில்வே கேட் அருகே உள்ள பெண்கள் பொதுக்கழிப்பிடத்தின் முன் சிலர் தொடர்ந்து குப்பை கொட்டி வந்தனர்.

நகராட்சி நிர்வாகம் பல முறை எச்சரித்தும் இந்த செயல் தொடர்ந்தது. மேலும், கழிப்பிட சுவரில் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் செய்வதும் வழக்கமாக இருந்தது. இதனால் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குப்பை கொட்டுவதையும், விளம்பர பேனர்கள் வைப்பதையும் தடுக்க கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரித்தது. பின்னர், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு வித்தியாசமான பேனரை வைத்துள்ளனர். அதில், "இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்" என்று நடிகர் வடிவேலுவின் பாணியில் வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த புதுமையான அணுகுமுறை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வழியே செல்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். இந்த அறிவிப்புக்குப் பின் அங்கு இதுவரை யாரும் குப்பைகளை கொட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...