உடுமலை நாராயணகவி கவிராயர் 125வது பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மரியாதை

உடுமலையில் நாராயணகவி கவிராயரின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், எம்.பி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Coimbatore: உடுமலை நாராயணகவி கவிராயரின் 125வது பிறந்தநாள் விழா இன்று (25.09.2023) உடுமலையில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, உடுமலை குட்டை திடலில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வரசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாராயணகவி கவிராயர் 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பூளவாடி கிராமத்தில் பிறந்தார். பொதுவுடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை கற்றறிந்த அவர், விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடைகள் தோறும் பாடினார்.



இந்நிகழ்வில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் ஆ.காளீஸ்வரன் வரைந்த நாராயணகவியின் உருவப்படம் பரிசளிக்கப்பட்டது. உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில், உடுமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு நாராயணகவியின் பெயரைச் சூட்டுதல், மணிமண்டபத்தில் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் உடுமலை நாராயணகவி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...