வால்பாறை சாலைகளில் அலையும் கால்நடைகள்: விபத்து அபாயம் குறித்து நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

வால்பாறை நகர சாலைகளில் அலையும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: வால்பாறை நகர பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் அலைந்து திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் உள்ள சாலைகள் குறுகலானவை. காமராஜர் நகர் முதல் புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஒவ்வொரு வாகனமும் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த பிரச்சினை குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அலைந்து திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாலைகளில் மாடுகளை விடுவதை தடுக்கவும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...