கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: ஏர் ஹாரன் பயன்படுத்திய பேருந்துகளுக்கு அபராதம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. 90 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.



ஆய்வின் போது, 90 டெசிபலுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் கொண்ட பேருந்துகள் கண்டறியப்பட்டன.



இத்தகைய பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டன.



மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் இந்த ஆய்வு குறித்து பேசுகையில், "மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரையின் பேரிலும், மாவட்டத்தில் பல்வேறு வாகனங்களில் ஏர் ஹாரன் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது," என்றார்.

"மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் நான்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து இந்த தணிக்கையை மேற்கொண்டனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தணிக்கையின் போது, அரசு பேருந்துகள் உட்பட 20 பேருந்துகள் அதிக டெசிபல் அளவு கொண்ட ஏர் ஹாரன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த பேருந்துகளுக்கு ஆய்வறிக்கை வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



இத்தகைய விதிமீறல்களுக்கான அபராதத் தொகை 3,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் வரை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...