கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: ஏர் ஹாரன் பயன்படுத்திய பேருந்துகளுக்கு அபராதம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. 90 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.



ஆய்வின் போது, 90 டெசிபலுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் கொண்ட பேருந்துகள் கண்டறியப்பட்டன.



இத்தகைய பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டன.



மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் இந்த ஆய்வு குறித்து பேசுகையில், "மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரையின் பேரிலும், மாவட்டத்தில் பல்வேறு வாகனங்களில் ஏர் ஹாரன் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது," என்றார்.

"மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் நான்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து இந்த தணிக்கையை மேற்கொண்டனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தணிக்கையின் போது, அரசு பேருந்துகள் உட்பட 20 பேருந்துகள் அதிக டெசிபல் அளவு கொண்ட ஏர் ஹாரன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த பேருந்துகளுக்கு ஆய்வறிக்கை வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



இத்தகைய விதிமீறல்களுக்கான அபராதத் தொகை 3,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் வரை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...