கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: ஏர் ஹாரன் பயன்படுத்திய பேருந்துகளுக்கு அபராதம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. 90 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.



ஆய்வின் போது, 90 டெசிபலுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் கொண்ட பேருந்துகள் கண்டறியப்பட்டன.



இத்தகைய பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டன.



மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் இந்த ஆய்வு குறித்து பேசுகையில், "மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரையின் பேரிலும், மாவட்டத்தில் பல்வேறு வாகனங்களில் ஏர் ஹாரன் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது," என்றார்.

"மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் நான்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து இந்த தணிக்கையை மேற்கொண்டனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தணிக்கையின் போது, அரசு பேருந்துகள் உட்பட 20 பேருந்துகள் அதிக டெசிபல் அளவு கொண்ட ஏர் ஹாரன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த பேருந்துகளுக்கு ஆய்வறிக்கை வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



இத்தகைய விதிமீறல்களுக்கான அபராதத் தொகை 3,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் வரை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...