கோவை பீளமேடு பகுதியில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்

கோவை மாநகராட்சி வார்டு 26ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தின் CSR நிதியுடன் 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 26க்குட்பட்ட பீளமேடு, பாலகுரு கார்டன் பகுதியில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தின் முழு (100%) சமூக பொறுப்பு நிதியின் (CSR Fund) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (செப்டம்பர் 24) இந்த பணியை தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம், பீளமேடு மற்றும் பாலகுரு கார்டன் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...