கோவை கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

கோவையின் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் சுற்றுலா சென்றபோது, ஸ்டேன்மோர் எஸ்டேட் அருகே ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளானர். ஒரு மாணவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்ற கோவை ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி மாணவர்கள் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் 3 இருசக்கர வாகனங்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சோலையார் அணையை நோக்கி செல்லும் வழியில், ஸ்டேன்மோர் எஸ்டேட் வளைவில் திரும்பும்போது, டாடா காப்பி எஸ்டேட்டுக்கு சொந்தமான ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.



இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீகாந்த் (20) மற்றும் ரோஷன் (20) ஆகிய இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் நண்பர்கள் ஆட்டோவில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே ஸ்ரீகாந்த் உயிரிழந்துவிட்டார். ரோஷன் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஸ்ரீகாந்தின் உடல் வால்பாறை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வால்பாறை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...