கோவை கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

கோவையின் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் சுற்றுலா சென்றபோது, ஸ்டேன்மோர் எஸ்டேட் அருகே ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளானர். ஒரு மாணவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்ற கோவை ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி மாணவர்கள் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் 3 இருசக்கர வாகனங்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சோலையார் அணையை நோக்கி செல்லும் வழியில், ஸ்டேன்மோர் எஸ்டேட் வளைவில் திரும்பும்போது, டாடா காப்பி எஸ்டேட்டுக்கு சொந்தமான ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.



இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீகாந்த் (20) மற்றும் ரோஷன் (20) ஆகிய இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் நண்பர்கள் ஆட்டோவில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே ஸ்ரீகாந்த் உயிரிழந்துவிட்டார். ரோஷன் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஸ்ரீகாந்தின் உடல் வால்பாறை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வால்பாறை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...