கோவையில் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பேரில் மோசடி செய்த மூவர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் கணக்காளர் நாகராஜ்  கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கோவையில் சிலர் மலிவு விலைக்கு சமையல் எண்ணெய் வாங்கி அதை டின்களில் அடைத்து, அதில் தங்கள் சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்வதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அனந்த ராஜ் (35), சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் (35) மற்றும் விவேகானந்தன் (35) ஆகிய மூவரும் முறைகேடாக சமையல் எண்ணெய் விற்பது தெரிவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 200 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...