சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு

கோவை ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை தனியாக விடப்பட்டு இருந்தது. போலீசார் குழந்தையை மீட்டு அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: சென்னையில் இருந்து கோவை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக விடப்பட்டிருந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

செப்டம்பர் 21 அன்று இரவு 11.15 மணியளவில் சென்னையில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர், தூய்மை பணியாளர்கள் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு பெட்டியில் உள்ள சீட்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தூய்மை பணியாளர்கள் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் கஜேந்திரன் மற்றும் ரம்யா ஆகியோர் குழந்தையை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீண்ட நேரம் கடந்தும் குழந்தையை காணவில்லை என்று யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. குழந்தையின் பெற்றோர் ரயிலில் தவறவிட்டு சென்றனரா அல்லது வேண்டுமென்றே விட்டுச் சென்றனரா என்பது தெளிவாகவில்லை.

தற்போது போலீசார் குழந்தையின் பெற்றோரின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதுவரை குழந்தையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கிணத்துக்கடவில் உள்ள அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...