சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு

கோவை ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை தனியாக விடப்பட்டு இருந்தது. போலீசார் குழந்தையை மீட்டு அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: சென்னையில் இருந்து கோவை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக விடப்பட்டிருந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

செப்டம்பர் 21 அன்று இரவு 11.15 மணியளவில் சென்னையில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர், தூய்மை பணியாளர்கள் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு பெட்டியில் உள்ள சீட்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தூய்மை பணியாளர்கள் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் கஜேந்திரன் மற்றும் ரம்யா ஆகியோர் குழந்தையை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீண்ட நேரம் கடந்தும் குழந்தையை காணவில்லை என்று யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. குழந்தையின் பெற்றோர் ரயிலில் தவறவிட்டு சென்றனரா அல்லது வேண்டுமென்றே விட்டுச் சென்றனரா என்பது தெளிவாகவில்லை.

தற்போது போலீசார் குழந்தையின் பெற்றோரின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதுவரை குழந்தையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கிணத்துக்கடவில் உள்ள அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...