கோவையில் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய கட்டிடத்தின் பணிகளையும் பார்வையிட்டார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விடுதி ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி வருகின்றனர்.

10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளாகத்திலேயே புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கட்டிடம் கட்டப்பட்டு வரும் இடம் மற்றும் அதன் வரைபடம், பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர் விடுதிக்குள் சென்ற அமைச்சர், அங்குள்ள வேலையாட்கள் மற்றும் தங்கி கல்வி பயின்று வரும் மாணவிகளிடம் விடுதியில் அளிக்கப்படும் வசதிகள் மற்றும் உணவு போன்றவை குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், "கோவையில் 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை தற்பொழுது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். இப்போது கட்டப்பட்டு வரும் கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கூடியது. குறிப்பாக கட்டிடத்திற்குள்ளேயே மாணவிகள் தங்கும் அறைகள், குளியலறைகள், மேசைகள், நாற்காலிகள், கட்டில்கள் போன்றவை அனைத்தும் இடம்பெறும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தமிழகத்தின் திருச்சி, மதுரை, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...