உக்கடம் புல்லுக்காட்டில் புதிய விளையாட்டு மைதானம் திறப்பு: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை உக்கடம் புல்லுக்காட்டில் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (23.09.2024) இதனை திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி உக்கடம், புல்லுக்காடு, சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையம் (Solar Power Plant) அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.09.2024) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம், புல்லுக்காடு பகுதியில் ரூ.6.90 இலட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.00 ஏக்கர் பரப்பளவிற்கு மண்மேடுகள் சமன் செய்யப்பட்டு, குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.



270.00 மீட்டர் நீளத்திற்கு முள்கம்பிவேலி உடன் கூடிய இரும்பு கதவுடன் கூடிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



திறப்பு விழாவிற்கு முன்னதாக, விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மேயர், மாநகர காவல் ஆணையாளர், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.



மேலும், சுமார் 86-வருட பாரம்பரியமிக்க மரம் மறுநடவு செய்யப்பட்டதையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமதுகபீர், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையம் எதிர்ப்புறம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் து.சு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், இளம்பொறியாளர் ஹரிபிரசாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...