உக்கடம் புல்லுக்காட்டில் புதிய விளையாட்டு மைதானம் திறப்பு: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை உக்கடம் புல்லுக்காட்டில் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (23.09.2024) இதனை திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி உக்கடம், புல்லுக்காடு, சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையம் (Solar Power Plant) அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.09.2024) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம், புல்லுக்காடு பகுதியில் ரூ.6.90 இலட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.00 ஏக்கர் பரப்பளவிற்கு மண்மேடுகள் சமன் செய்யப்பட்டு, குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.



270.00 மீட்டர் நீளத்திற்கு முள்கம்பிவேலி உடன் கூடிய இரும்பு கதவுடன் கூடிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



திறப்பு விழாவிற்கு முன்னதாக, விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மேயர், மாநகர காவல் ஆணையாளர், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.



மேலும், சுமார் 86-வருட பாரம்பரியமிக்க மரம் மறுநடவு செய்யப்பட்டதையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமதுகபீர், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையம் எதிர்ப்புறம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் து.சு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், இளம்பொறியாளர் ஹரிபிரசாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...