மேயர் வடவள்ளி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்

கோயம்புத்தூர் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வடவள்ளி மற்றும் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். மேலும், கல்வீரம்பாளையம் கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகளையும் பார்வையிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சனிக்கிழமை (செப்டம்பர் 23) வடவள்ளி மற்றும் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேற்கு மண்டலம், வார்டு எண் 37க்குட்பட்ட இப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கல்வீரம்பாளையம், கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



கொங்கு நகரில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தரைதளம் அமைப்பதற்கான உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வுப் பணியில் மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் குமுதம், உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் வீரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...