மேயர் வடவள்ளி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்

கோயம்புத்தூர் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வடவள்ளி மற்றும் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். மேலும், கல்வீரம்பாளையம் கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகளையும் பார்வையிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சனிக்கிழமை (செப்டம்பர் 23) வடவள்ளி மற்றும் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேற்கு மண்டலம், வார்டு எண் 37க்குட்பட்ட இப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கல்வீரம்பாளையம், கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



கொங்கு நகரில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தரைதளம் அமைப்பதற்கான உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வுப் பணியில் மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் குமுதம், உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் வீரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...