தாராபுரம் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே உள்ள தனியார் கேஸ் பங்க் அருகே சிறுத்தை ஒன்று இருப்பதை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 40) பார்த்தார். உடனடியாக அவர் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தலைமை காவலர்கள் கருப்புசாமி மற்றும் சேகர் ஆய்வு செய்தனர். பின்னர் காங்கேயம் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் தனியார் கேஸ் பங்கின் அருகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்தனர். மேலும், சிவக்குமாரிடம் சிறுத்தையின் அடையாளங்களை கேட்டறிந்தனர். இப்பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம்பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.

வனக்காவலர்கள் சிறுத்தையின் கால் தடம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...