திமுக பவள விழா: கோவை 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முகாமை துவக்கி வைத்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைய உள்ளனர்.



Coimbatore: திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி துவக்கி வைத்தார்.

சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட விஸ்வாசபுரத்தில் 5-வது வார்டு திமுக, லயன்ஸ் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், முத்துஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தன. துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, சிறுபான்மை உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான், பகுதி கழக செயலாளர் பொன்னுசாமி, மாமன்ற உறுப்பினர் நவீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ முகாம் குறித்து வார்டு செயலாளர் கண்ணன் கூறுகையில், "இந்த முகாமில் குழந்தைகள் பொதுநல பரிசோதனை, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, ஆறாத புண் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்பட்ட புண்களுக்கு சிகிச்சை, கை, கால், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆலோசனை, இருதய மாரடைப்பு சிகிச்சைகளுக்கான ஆலோசனை, பித்தப்பை கல் மற்றும் குடல் இறக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது," என்றார்.

முகாம் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த வார்டுக்கு உட்பட்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாமில் பயனடைய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மருத்துவ முகாமில் துணை செயலாளர் வி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...