திமுக பவள விழா: கோவை 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முகாமை துவக்கி வைத்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைய உள்ளனர்.



Coimbatore: திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி துவக்கி வைத்தார்.

சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட விஸ்வாசபுரத்தில் 5-வது வார்டு திமுக, லயன்ஸ் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், முத்துஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தன. துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, சிறுபான்மை உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான், பகுதி கழக செயலாளர் பொன்னுசாமி, மாமன்ற உறுப்பினர் நவீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ முகாம் குறித்து வார்டு செயலாளர் கண்ணன் கூறுகையில், "இந்த முகாமில் குழந்தைகள் பொதுநல பரிசோதனை, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, ஆறாத புண் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்பட்ட புண்களுக்கு சிகிச்சை, கை, கால், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆலோசனை, இருதய மாரடைப்பு சிகிச்சைகளுக்கான ஆலோசனை, பித்தப்பை கல் மற்றும் குடல் இறக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது," என்றார்.

முகாம் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த வார்டுக்கு உட்பட்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாமில் பயனடைய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மருத்துவ முகாமில் துணை செயலாளர் வி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...