தாராபுரம் அருகே அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம்

தாராபுரம் அருகே நல்லம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியளிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள நல்லம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அதிமுக தலைமை கழக பேச்சாளர் இராசகோபால் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு தலைமை வகித்த திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் எம்எல்ஏவுமான மகேந்திரன் உரையாற்றினார்.



தனது உரையில் மகேந்திரன், "2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்" என்று உறுதியாகக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலகுமாரன், செந்தில்குமார், சோமசுந்தரம், ராஜரத்தினம், நகர செயலாளர் ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் பைப்ரவி, தமிழரசன், லட்சுமணசாமி, வெற்றிவேல், சுகன்குமார், கொளத்துப்பாளையம் அவைத்தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சின்னத்துரை, சிவசங்கரன், ராமதுரை மற்றும் பல சார்பு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இளைஞர் அணி தேர்பட்டி ஆதித்தன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...