உடுமலையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்

உடுமலையில் பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பேசியதாக குற்றம் சாட்டினர்.



திருப்பூர்: உடுமலையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்திய தேர்தல் நடைமுறை குறித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த தர்விந்தர் சிங் மர்வா, சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் கெய்க்வாட், உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த எச்.ராஜா ஆகியோர் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கலவரத்தை தூண்டிவிடும் நோக்கத்திலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்திலும் அமைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை நகர காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், கிட்டுசாமி, உடுமலை நகர மன்ற 4-வது வார்டு உறுப்பினர் கலைவாணி, எஸ்.முருகன், வக்கீல் வெற்றிவேல் குமார், பொன் பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...