காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காலை முதலே அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாதரை தரிசனம் செய்தனர். விவசாயம் செழிக்கவும் உணவு பஞ்சம் நீங்கவும் வேண்டி, அரங்கநாதரின் சேவகர்களாக திகழும் தாசர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், செயல் அலுவலர் ரா.சந்திரமதி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...