காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காலை முதலே அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாதரை தரிசனம் செய்தனர். விவசாயம் செழிக்கவும் உணவு பஞ்சம் நீங்கவும் வேண்டி, அரங்கநாதரின் சேவகர்களாக திகழும் தாசர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், செயல் அலுவலர் ரா.சந்திரமதி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...