தற்காப்புக்காக ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கிச் சூடு: கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம்

கோவையில் ரவுடி ஆல்வின் காவலர் மீது கத்தியால் தாக்கியதால், தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.



கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது, இன்று அதிகாலை கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் சுட்டுப் பிடிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.



ஆல்வின் மீது 3 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் இருப்பதாக தெரிவித்த காவல் ஆணையர், கடந்த ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆல்வின் மீது NBW (Non-bailable Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். இதையடுத்து, மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ஆல்வினை தேடி வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரை பிடிக்கச் சென்ற போது தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடிசியா பகுதியில் ஆல்வினை காவலர்கள் பிடிக்க முற்பட்டபோது, அவர் தலைமை காவலர் ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதாக காவல் ஆணையர் கூறினார். இதனையடுத்து, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆல்வினை காலில் சுட்டதாகவும் தெரிவித்தார். தற்போது காயம் பட்ட தலைமை காவலரும் சுடப்பட்ட குற்றவாளியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...