கோவை K'SIRS இண்டர்நேஷனல் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா கோலாகலம்

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள K'SIRS இண்டர்நேஷனல் பள்ளியில் 'ANNUAL SPORTS MEET 2024' விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரகுருபர சுவாமிகள், கலைவாணி இன்ஸ்டிடியூஷன்ஸ் சேர்மன் குமாரசாமி, திமுக சுற்றுச்சூழல் பிரிவு துணைச் செயலாளர் மணிசுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



கோவை: கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள K'SIRS இண்டர்நேஷனல் பள்ளியில் 'ANNUAL SPORTS MEET 2024' எனும் வருடாந்திர விளையாட்டு விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.



இவ்விழாவில் குமரகுருபர சுவாமிகள், கலைவாணி இன்ஸ்டிடியூஷன்ஸ் சேர்மன் குமாரசாமி, திமுக சுற்றுச்சூழல் பிரிவு துணைச் செயலாளர் மணிசுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விழாவின் தொடக்கமாக, K'SIRS இண்டர்நேஷனல் பள்ளியின் அணிவகுப்பு படையினர் சிறப்பு விருந்தினர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து குமரகுருபர சுவாமிகள் ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றிக் கொடுத்து விளையாட்டு தின விழாவை துவக்கி வைத்தார்.



இந்த விளையாட்டு தின விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.



100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் போட்டிகள், தொடர் ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் அமைந்தன.



விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமல்லாமல், மாணவர்களின் கலைத்திறனையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.



மாணவர்கள் நிகழ்த்திய பரதநாட்டியம், நடனம், மனித பிரமிடு, சிலம்பம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்வு மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...