கோவை: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கோவை வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தின் வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.

பெரியநாயக்கன்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சுதன் சாய், கை மற்றும் கால்களில் குறைபாடுகளுடன் பிறந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று (20.09.2024) மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சுதன் சாய்க்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்வில் தாட்கோ மேலாளர் கு.மகேஸ்வரி உடனிருந்தார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...