கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போர்வெல் லாரி ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் மரணம் - கொலையா என விசாரணை

கோவையில் போர்வெல் லாரி ஓட்டுநர் நந்தகுமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் அல்லிநகரில் போர்வெல் லாரி ஓட்டுநர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரமடை அருகே உள்ள சாலவேம்பு பகுதியைச் சேர்ந்த புஜங்கபனின் மகன் நந்தகுமார் (46) என்பவர் போர்வெல் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இரண்டு மனைவிகள் உள்ள நந்தகுமார், தற்போது இரண்டாவது மனைவியுடன் மருதூரில் வசித்து வந்தார்.



நேற்று வேலை இல்லாததால் லாரி நிறுத்தப்படும் அல்லிநகருக்கு வந்த நந்தகுமார், அங்கேயே மது அருந்தியபின் லாரியிலேயே படுத்து தூங்கினார். இன்று காலை அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, நந்தகுமார் லாரியில் இருந்து கீழே விழுந்து தலை மற்றும் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தகுமார் தானாக கீழே விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...