கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போர்வெல் லாரி ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் மரணம் - கொலையா என விசாரணை

கோவையில் போர்வெல் லாரி ஓட்டுநர் நந்தகுமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் அல்லிநகரில் போர்வெல் லாரி ஓட்டுநர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரமடை அருகே உள்ள சாலவேம்பு பகுதியைச் சேர்ந்த புஜங்கபனின் மகன் நந்தகுமார் (46) என்பவர் போர்வெல் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இரண்டு மனைவிகள் உள்ள நந்தகுமார், தற்போது இரண்டாவது மனைவியுடன் மருதூரில் வசித்து வந்தார்.



நேற்று வேலை இல்லாததால் லாரி நிறுத்தப்படும் அல்லிநகருக்கு வந்த நந்தகுமார், அங்கேயே மது அருந்தியபின் லாரியிலேயே படுத்து தூங்கினார். இன்று காலை அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, நந்தகுமார் லாரியில் இருந்து கீழே விழுந்து தலை மற்றும் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தகுமார் தானாக கீழே விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...