சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சாக்கடை சுத்தம், குப்பை மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27-ல் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கும் வகையில் 'தாயுமானவர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பீளமேடு சிந்தாமணி நியாய விலை கடை மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.




சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில், நடமாட முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சேவை பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இந்நிகழ்வை நேரில் சென்று ஆய்வு செய்து, பயனாளிகளின் நலனை விசாரித்தார். நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




மேலும், வார்டு 27-ல் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. பேரா நாயுடு வீதி, திருவேங்கடசாமி வீதி, ஆனந்த் திருவேங்கடசாமி வீதி பகுதிகளில் சாக்கடை மற்றும் சாலையோரத்தில் வளர்ந்த செடிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று இப்பணிகளை ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களிடம் முழுமையான சுத்தம் செய்யுமாறு வலியுறுத்தினார்.




சின்னசாமி அவன்யூ பகுதியிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டன. கவுன்சிலர் இப்பணியை ஆய்வு செய்து, தினசரி சாலையோர குப்பைகளை சுத்தம் செய்யும்படி தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.




ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில், குப்பை சேகரிப்பு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை கவுன்சிலர் ஆய்வு செய்தார். தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியான நேரத்தில் வருகிறதா என்று பார்வையிட்டார். பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தரும்படி வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...