கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 2 செண்ட் நிலம் அன்பளிப்பு: எஸ்.பி.வேலுமணி உதவி

கோவை தொண்டாமுத்தூரில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் 90 வயது கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்தார். பாட்டியின் சேவையை பாராட்டும் விதமாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.



Coimbatore: கோவையில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது சொந்த செலவில் 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90 வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார். இவரது நேர்மையையும், சமூக சேவையையும் பாராட்டும் விதமாக, எஸ்.பி.வேலுமணி இந்த உதவியை செய்துள்ளார்.



பாட்டி கமலாத்தாளின் வீட்டின் அருகிலேயே இரண்டு செண்ட் நிலம் வாங்கப்பட்டு, அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் பத்திரத்தை நேரில் சென்று பாட்டி கமலாத்தாவிடம் ஒப்படைத்தார் எஸ்.பி.வேலுமணி.

இந்த அன்பளிப்பு மூலம், பாட்டி கமலாத்தாளின் சேவை மேலும் தொடர ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சமூக சேவையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...