கோவையில் தடையை மீறி பீடி, சிகரெட் விற்ற 4 வியாபாரிகள் கைது

கோவையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட் விற்பனை தடை உத்தரவை மீறி விற்பனை செய்த 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனையில் 204 பாக்கெட் பீடி, சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை உக்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று (செப்டம்பர் 18) டவுன்ஹால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பி.எட் பெண்கள் பயிற்சி கல்லூரி எதிர்புறம் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடையில் இருந்து 148 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அக்கடையின் உரிமையாளரான ஒண்டிப்புதூர் எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (60 வயது) கைது செய்யப்பட்டார்.

இதேபோல, சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள மற்றொரு பெட்டிக்கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்ததாக மசக்காளிபாளையம் வெள்ளத்துரை (42 வயது) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, உப்பிலிபாளையம் - காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்ததாக மணிவாசகம் (74 வயது) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 21 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 23 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வரதராஜபுரம் பாலாஜி நகரைச் சேர்ந்த கனகராஜ் (70 வயது) கைது செய்யப்பட்டார்.

கல்வி நிறுவனங்கள் அருகில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நான்கு வியாபாரிகளும் சட்டத்தை மீறி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 204 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...