மேட்டுப்பாளையம் அருகே கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருட்டு: தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் அருகே புத்தர் நகரில் மதுரை வீரன் கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருடப்பட்டது. ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புத்தர் நகர் ஆதி திராவிடர் மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 80க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் கோவிலுக்கு ஒரு ஆட்டு கிடாயினை நேர்ந்து விட்டு, அதனை அனைவரும் ஒன்றினைந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், நேற்று இரவு ஊர் மக்கள் வளர்த்து வந்த கிடாயினை மர்மநபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ஆடு கிடைக்கவில்லை. இதனையடுத்து, காரமடை காவல்நிலையத்தில் ஊர் மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊர் மக்கள் சார்பில் காணாமல் போன ஆட்டின் புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஆடு திருடுபோனது குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் மக்கள் திருடப்பட்ட ஆட்டினை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...