மேட்டுப்பாளையம் அருகே கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருட்டு: தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் அருகே புத்தர் நகரில் மதுரை வீரன் கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருடப்பட்டது. ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புத்தர் நகர் ஆதி திராவிடர் மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 80க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் கோவிலுக்கு ஒரு ஆட்டு கிடாயினை நேர்ந்து விட்டு, அதனை அனைவரும் ஒன்றினைந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், நேற்று இரவு ஊர் மக்கள் வளர்த்து வந்த கிடாயினை மர்மநபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ஆடு கிடைக்கவில்லை. இதனையடுத்து, காரமடை காவல்நிலையத்தில் ஊர் மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊர் மக்கள் சார்பில் காணாமல் போன ஆட்டின் புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஆடு திருடுபோனது குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் மக்கள் திருடப்பட்ட ஆட்டினை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...