மேட்டுப்பாளையம் அருகே கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருட்டு: தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் அருகே புத்தர் நகரில் மதுரை வீரன் கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருடப்பட்டது. ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புத்தர் நகர் ஆதி திராவிடர் மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 80க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் கோவிலுக்கு ஒரு ஆட்டு கிடாயினை நேர்ந்து விட்டு, அதனை அனைவரும் ஒன்றினைந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், நேற்று இரவு ஊர் மக்கள் வளர்த்து வந்த கிடாயினை மர்மநபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ஆடு கிடைக்கவில்லை. இதனையடுத்து, காரமடை காவல்நிலையத்தில் ஊர் மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊர் மக்கள் சார்பில் காணாமல் போன ஆட்டின் புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஆடு திருடுபோனது குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் மக்கள் திருடப்பட்ட ஆட்டினை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...