நிபா வைரஸ் தடுப்பு: கோவை-கேரள எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக, கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வாகனங்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்கி ஒரு வாலிபர் இறந்ததைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபனாரி மற்றும் முள்ளி பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

டாக்டர் பிரவீன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழுவில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா, இரண்டு நர்சுகள் மற்றும் ஒரு மருந்தாளுநர் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர்.

காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், வாகனங்களில் வரும் பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்படுகின்றன.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...