தொப்பம்பட்டி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழக முதல்வரின் சிறப்பான திட்டத்தின் கீழ் இன்று (செப்டம்பர் 19) காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது, காலை உணவு திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும், உணவின் தரம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அதிகாரிகள் பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரத்தை நேரடியாக பரிசோதித்தனர்.



இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...