பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று போட்டி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இரண்டு நாள் இறுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII) சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று நிகழ்வு இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது.



இந்த நிகழ்வில் EDII நிறுவனத்தின் இயக்குனர் ஆர். அம்பலவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவின் உறுப்பினர் முனைவர் லவ்லி நா லிட்டில் பிளவர் துவக்க உரை நிகழ்த்தினார். EDII நிறுவனத்தின் மாநில திட்ட மேலாளர் சி.சண்முகராஜ் கருத்துரை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். EDII நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சரண்யா நன்றியுரை வழங்கினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் செப்டம்பர் 18 அன்று சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 29 அணிகளும், செப்டம்பர் 19 அன்று சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் திருச்சி மண்டலங்களைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்கின்றன. இந்த நிகழ்வை மேற்கூறிய மண்டலங்களின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போட்டியானது மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதோடு, அவர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவும், மேம்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகிறது. இது மாணவர்களிடையே தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்ப்பதோடு, அவர்களின் புதிய யோசனைகளை செயல்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...