கோவை மாநகராட்சி ஆணையாளர் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மதிய உணவை பரிசோதித்த ஆணையாளர், டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தை இன்று (18.09.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை உட்கொண்டு பரிசோதித்தார்.

மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாநகராட்சி ஆணையாளர் குழந்தைகளுக்கான வசதிகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து, அதே வார்டில் உள்ள டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வில் மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, துணை ஆட்சியர் (பயிற்சி) மது அபிநயா இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீ, சம்பத், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர்கள் ராஜேஸ்வேணுகோபால், ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...