புரட்டாசி பெளர்ணமியை முன்னிட்டு உருமாண்டம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

கோவை உருமாண்டம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ஒன்று மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 7 தாசர்களுக்கு படையல் போடப்பட்டு, ரங்க ராமருக்கு சங்கு சேகண்டி ஊதப்பட்டது.



கோவை: கோவை உருமாண்டம்பாளையம் ஸ்ரீ அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ஒன்று மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டதுடன், ரங்க ராமர் கடவுளுக்கு சங்கு சேகண்டி ஊதி தாசர்களுக்கு படையல் போடப்பட்டது.



புரட்டாசி மாதம் தமிழ் 1ம் தேதியை ஒட்டி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில் பெளர்ணமி குழு சார்பில் மாலை 4 மணிக்கு அபிஷேக பூஜையும் 6 மணிக்கு சுத்து பூஜை மற்றும் அலங்கார பூஜையும் நடைபெற்றது.

புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு 7 தாசர்களை வரவழைத்து அவர்களுக்கு தலைவாழையிட்டு அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, காணிக்கை, உப்பு, புளி, மிளகாய், அரிசி, பருப்பு, பச்சபயிர், பாவக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், அரசாணிக்காய், சேனைக்கிழக்கு உள்ளிட்டவைகளை படையல்களாக வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.



இந்த நிகழ்வில் 7 தாசர்கள் ரங்கராமரை வேண்டி சங்கு ஊதி பாடல்கள் பாடினர்.



அதன்பின்னர் பக்தர்கள் அனைவரும், 7 தாசர்கள் முன்பு வைத்த படையலை தொட்டு வணங்கி அரிசியை மடிப்பிச்சையாக வாங்கிச் சென்றனர். அந்த அரிசியினை வீட்டில் உள்ள அரிசியுடன் சேர்த்து சமைத்து வந்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.

நிகழ்வின் தொடக்கத்தில் மாப்பிள்ளை விநாயகர், பண்ணாரி மாரியம்மன், தலவிருட்சம் உள்ளிட்டவைகளுக்கு சுற்று பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நிலா தெரியும்படி கண்ணாடி வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, கண்ணாடியில் பக்தர்கள் பெளர்ணமி நிலாவை பார்த்து சாமி தரிசனம் செய்தனர்.



நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில் பெளர்ணமி குழு நிர்வாக பொருப்பாளர் தேவேந்திரன், குழுவை சேர்ந்த சின்னுராமகிருஷ்ணன், ஜெய்பிரகாஷ், விஜயகுமார், பொன்னுசாமி, பானு நாகராஜ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...