உலக இருதய தினத்தையொட்டி கோவையில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான்

கோவையில் செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான் நடைபெறுகிறது. இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (GKNM) சார்பில் உலக இருதய தினத்தையொட்டி "ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்" என்ற பெயரில் விழிப்புணர்வு மராத்தான் நடைபெறவுள்ளது. இந்த மராத்தான் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி காலை 5:30 மணியளவில் பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கும்.

இந்த நிகழ்வு இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மராத்தான் நிகழ்வுக்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீட்டு விழா ஏற்கனவே கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

GKNM மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி கூறுகையில், "கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். அதில் கிடைத்த நிதியுதவியில் இதயம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள் பயனடைந்தனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள மராத்தானில் புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளில் இருந்து குணமடைந்த குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இந்த நிகழ்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்" என்றும் கூறினார். இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ticketprix.com என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் அல்லது 97900 72303 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...