கொடநாடு காவலாளி கொலை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.பி முரளிரம்பா பேட்டி

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் உதகை எஸ்.பி முரளிரம்பா கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சயான் என்பவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜனிடம் சயான் உடல் நிலை குறித்து கேட்டறிந்த எஸ்.பி முரளிரம்பா பின்னர், சயானிடம் விசாரணை நடத்தினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சயானிடம் எஸ்.பி முரளிரம்பா விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிரம்பா கூறுகையில், முதலில் சயானின் உயிர் மிகவும் முக்கியம். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சையில் சயான் முழு நினைவுடன் நலமுடன் உள்ளார்.

விசாரணையின் போது அவர் மெதுவாக பேசினார். முழு விசாரணைக்கு ஏற்றபடி அவர் உடல்நலம் இல்லை. அதே வேளையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் நுட்ப ரீதியாகவும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என முரளிரம்பா கூறினார்.

இதைத்தொடர்ந்து, சயானை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது ஏன் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, சயானை கேரள போக்குவரத்துக் காவல்துறைதான் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்" என்றார். கூடலூரைச் சேர்ந்த சஞ்சீவன் என்பவருக்கும் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளிக்க முரளிரம்பா மறுத்து விட்டார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...