கோவை ஆர்.எஸ்.புரத்தில் போலி மருத்துவர் தம்பதி கைது: நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர். சிறுவனின் தாத்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம், ராபர்ட்சன் ரோட்டில் உள்ள அஜய் நீரோ கிளினிக் என்ற மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அம்பத்தூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 70) என்பவரின் 7 வயது பேரன் இக்சிட் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அஜய் நீரோ கிளினிக்கிற்கு ராமச்சந்திரன் தனது பேரனை அழைத்து வந்திருந்தார்.

சிறுவனை பரிசோதித்த டாக்டர் பாலாஜி சக்கரவர்த்தி, அவரை முழுமையாக குணப்படுத்துவதாகக் கூறினார். இதை நம்பி ராமச்சந்திரன் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மருத்துவ கட்டணமாக செலுத்தினார். ஆனால், சிகிச்சைக்குப் பின் சிறுவனின் காலில் வலி ஏற்பட்டது.

பின்னர், அந்த மருத்துவமனை நிபுணர்கள், பூமார்க்கெட் சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனையை பரிந்துரைத்தனர். அங்கு சென்று சிகிச்சை எடுத்தபோது, சிறுவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ராமச்சந்திரன் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று புகார் அளித்தார். அதன் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் பாலாஜி சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை செப்டம்பர் 17 அன்று கைது செய்தனர்.

விசாரணையில், பாலாஜி சக்கரவர்த்தி பிசியோதெரபிஸ்ட்டாகவும், செல்வி நியூரோ தெரபிஸ்ட்டாகவும் இருந்து கொண்டு மருத்துவராக நடித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த போலி மருத்துவர் தம்பதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...