கோவை ஆர்.எஸ்.புரத்தில் போலி மருத்துவர் தம்பதி கைது: நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர். சிறுவனின் தாத்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம், ராபர்ட்சன் ரோட்டில் உள்ள அஜய் நீரோ கிளினிக் என்ற மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அம்பத்தூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 70) என்பவரின் 7 வயது பேரன் இக்சிட் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அஜய் நீரோ கிளினிக்கிற்கு ராமச்சந்திரன் தனது பேரனை அழைத்து வந்திருந்தார்.

சிறுவனை பரிசோதித்த டாக்டர் பாலாஜி சக்கரவர்த்தி, அவரை முழுமையாக குணப்படுத்துவதாகக் கூறினார். இதை நம்பி ராமச்சந்திரன் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மருத்துவ கட்டணமாக செலுத்தினார். ஆனால், சிகிச்சைக்குப் பின் சிறுவனின் காலில் வலி ஏற்பட்டது.

பின்னர், அந்த மருத்துவமனை நிபுணர்கள், பூமார்க்கெட் சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனையை பரிந்துரைத்தனர். அங்கு சென்று சிகிச்சை எடுத்தபோது, சிறுவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ராமச்சந்திரன் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று புகார் அளித்தார். அதன் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் பாலாஜி சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை செப்டம்பர் 17 அன்று கைது செய்தனர்.

விசாரணையில், பாலாஜி சக்கரவர்த்தி பிசியோதெரபிஸ்ட்டாகவும், செல்வி நியூரோ தெரபிஸ்ட்டாகவும் இருந்து கொண்டு மருத்துவராக நடித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த போலி மருத்துவர் தம்பதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...