உடுமலையில் அரசு விடுமுறையை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை: திருவிழா போல் குவிந்த குடிமகன்கள்

உடுமலையில் மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கள்ளச்சந்தையில் இருமடங்கு விலைக்கு மதுபானம் விற்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையம் அருகே பெரும் கூட்டம் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் மிலாடி நபி அரசு விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடை எண் 2009-ல் உள்ள பாரில் அரசு மதுபானங்கள் இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டது.

மதுபானக் கடைகளுக்கு விடுப்பு விடப்பட்டதால் மதுபானம் தேடி அலைந்த மதுப்பிரியர்கள், மதுபானம் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது தெரிந்து திருவிழா கூட்டம் போல் கூடினர்.



மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்ததாலும், ஒரே இடத்தில் ஏராளமான குடிமகன்கள் கூடியதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரசு மதுபானக் கடை திறந்திருந்தால் கூட இவ்வளவு நெரிசலைக் கண்டதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதால் குடிமகன்களின் தொல்லைகளே அதிகரிக்கிறது என்று மது விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்களும் அப்பகுதி வியாபாரிகளும் புலம்பினர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...